Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் ஆவர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு எதுவும் இல்லாததால் மொத்த பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது. ஒரே நாளில் 7176 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 81 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு, முழுவதும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 809 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 56.8 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.